ட்விட்டர் நிறுவனத்தை 44 பில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு உலகின் மிகப்பெரிய பணக்காரரான ஈலோன் மஸ்க் வாங்குகிறார். முன்னதாக, ட்விட்டர் நிறுவனத்தை வாங்க ஈலோன் மஸ்க் முன்வந்தார். அதனை தற்போது ட்விட்டர் நிறுவனத்தின் நிர்வாகக்குழு ஏற்றுக்கொண்டுள்ளது.
ட்விட்டர் இயக்குநர் வாரியம் – ஈலோன் மஸ்க் இடையே நேற்று நடந்த நீண்ட நேர பேச்சுவார்த்தையில் இந்த ஈலோன் மஸ்கின் இந்த பேரத்தை ட்விட்டர் நிர்வாகிகள் ஏற்றுக்கொண்டனர். ட்விட்டர் நிறுவனத்தின் மொத்த பங்கையும், தலா ஒரு பங்கு 54.20 டாலர் என்ற விலைக்கு வாங்க உள்ளார் ஈலோன் மஸ்க். ட்விட்டரில் 9.2% பங்குகளை வைத்துள்ள ஈலோன் மஸ்க் அந்த நிறுவனத்தின் மிகப்பெரிய பங்குதாரராக தற்போது உள்ளார்.
ட்விட்டர் நிறுவனத்தை வாங்குவதற்கு ஈலோன் மஸ்க் இரு வாரங்களுக்கு முன்னதாக விருப்பம் தெரிவித்திருந்தார். அப்போது, ட்விட்டர் “மிகச்சிறந்த திறன்களை” கொண்டிருப்பதாகவும் அதனை தான் வெளிக்கொண்டு வரவிரும்புவதாகவும் தெரிவித்திருந்தாrர்.
மேலும், ட்விட்டர் தளத்தில் பல்வேறு மாற்றங்களை கொண்டுவருவது குறித்தும் அவர் அண்மைக் காலமாக கருத்து வெளியிட்டு வந்தார். அதில், ட்விட்டரில் பதிவுகள் சிலவற்றுக்கான கட்டுப்பாடுகளை தளர்த்துதல் மற்றும் போலி ட்விட்டர் கணக்குகளை நீக்குதல் உள்ளிட்டவை அடங்கும்.
ட்விட்டர் நிறுவனத்தின் மொத்த மதிப்பு கிட்டத்தட்ட 37 பில்லியன் டாலர்கள் (3,700 கோடி டாலர்கள்). இதை மொத்தமாக 44 பில்லியன் டாலர் (4,400 கோடி டாலர்) விலைக்கு வாங்கிக் கொள்வதாக ஒரு ஜாக்பாட்டை அறிவித்தார் மஸ்க். இந்த பேரத்தை ட்விட்டர் ஏற்றுக்கொண்டது. இதையடுத்து, ஈலோன் மஸ்க் கையகப்படுத்துவதை தடுக்கும் வகையில் அமல்படுத்த இருந்த விஷ மாத்திரை உத்தியை கைவிடவும் ட்விட்டர் நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
244 total views, 2 views today