அண்மைக்காலத்தில் நாட்டில் பதிவாகியுள்ள கொவிட் 19 தொற்றுப் பரவல் அதிகரிப்பின் காரணமாக சுகாதார அமைச்சு மேலும் சில எச்சரிக்கை மட்ட III இன் கீழ் அனுமதி வழங்கப்பட்டுள்ள விடயங்கள் மேலும் திருத்தப்பட்டுள்ளது.
சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்தன அறிக்கை ஒன்றை வௌியிட்டு இதனை குறிப்பிட்டுள்ளார்.
உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் வெளியிடப்பட்டுள்ள இவ்வழிகாட்டல்கள் மீள் அறிவித்தல் வரை நடைமுறையில் இருக்கும் என சுகாதார அமைச்சு குறிப்பிடடுள்ளது.
கொவிட் 19 தொற்றுப் பரவலுக்கு முகங் கொடுக்கும் வகையில் பொது மக்கள் செயற்பாடுகளை தளர்த்துதல் தொடர்பாக சுகாதார அமைச்சால் இதற்கு முன்னர் வெளியிடப்பட்டுள்ள நடவடிக்கை விபரங்கள் உள்ளிட்ட வழிகாட்டல்கள் மற்றும் சுற்றறிக்கைகளுக்கு ஒத்துழைப்பு நல்கும்.
கொவிட் 19 தொற்றுக்கு வெற்றிகரமாக முகங்கொடுப்பதற்காக பின்பற்ற வேண்டிய முற்பாதுகாப்பு ஏற்பாடுகள் பல (DReAM) சுகாதார அமைச்சால் வெளியிடப்பட்டுள்ளதுடன், குறித்த முற்பாதுகாப்பு மேற்குறிப்பிட்ட வழிகாட்டலில் உள்ளடக்கப்பட்டுள்ளது.
DReAM என அறிமுகப்படுத்தப்பட்டுள்ள குறித்த முற்பாதுகாப்பு விதிமுறைகள் கட்டாயமாகப் பின்பற்றப்பட வேண்டியதன் அவசியத்தை மீண்டும் மீண்டும் எடுத்துக் கூறப்படுகின்றது.
D – சமூக இடைவெளி, கூட்டமாக கூடாதிருத்தல், வீட்டிலேயே இருத்தல் (Physical Distancing, No gathering, Mainly stay at Home)
Re – சுவாச பழக்கங்கள் (Respiratory etiquette)
A – தொற்று நீக்கி முறைகள் (கைகளைக் கழுவுதல், தொற்று நீக்கித் திரவம் பயன்படுத்தல்) (Aseptic practices)
M – சரியான வகையில் முகக் கவசம் அணிதல் (Proper use of Mask)
கொவிட் 19 தொற்றைக் கட்டுப்படுத்துவதற்காக தற்போது வெளியிடப்பட்டுள்ள எச்சரிக்கை மட்டம் – 03 இற்கு மேலும் சில வரையறைகள் உள்வாங்கப்படுகின்றது.
193 total views, 1 views today