ஆப்கானிஸ்தனில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நில அதிர்வின் காரணமாக சுமார் 950 பேர் வரை உயிரிழந்துள்ளதுடன் 150 பேருக்கு மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ரிக்டர் அளவுக்கோலில் 6.1 மெக்னிடீயூடாக பதிவாகியுள்ளது.
தென்கிழக்கு ஆப்கானிஸ்தானில் உள்ள கோஸ்ட் (Khost) நகரிலிருந்து சுமார் 44 கிலோமீற்றர் தொலைவில் 51 கிலோமீற்றர் ஆழத்தில் இந்த நில அதிர்வு ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் (USGS) குறிப்பிட்டுள்ளது.
அத்துடன், இறப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடுமென தெரிவிக்கப்படுகிறது.
ரொய்ட்டர்ஸ் செய்தி சேவை மேற்கோள்காட்டியதன்படி, ஐரோப்பிய மத்திய தரைக்கடல் நில அதிர்வு மையத்தின் தரவுகளுக்கு அமைய, ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் மற்றும் இந்தியா ஆகிய நாடுகளில் 500 கிலோமீற்றருக்கும் அதிகமான நில அதிர்வு உணரப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
132 total views, 1 views today