இலங்கை சோசலிஷ குடியரசின்eruk நிகழ்வு வெகு விமர்சையாக நேற்று இடம்பெற்று முடிவுற்றது.
புத்தளம் பிரதேச சபை உறுப்பினர் ஜனாப் எஸ்.எம். ரிஜாஜ் அவர்களின் எற்பாட்டில் கடந்த மூன்று தினங்களாக இடம்பெற்ற இச் சுற்றுப்போட்டியில், சுமார் 32 அணிகள் பங்குபற்றின.
மின்னொளியில் இடம்பெற்ற இப்போட்டியினை enews1st நேரளை செய்தமை விஷேட அம்சமாகும்.
சகல போட்டிகளிலும் அபாரமாக விளையாடிய எருக்கலம்பிட்டி யூத் மற்றும் யூத் பல்காரா அணிகள் இருதிப்போட்டிக்கு தகுதிபெற்றன. மிகவும் சிறப்பாக விளையாடிய இரு அணிகளில் எருக்கலம்பிட்டி யூத் அணியினர் இருதிப்போட்டியில் வெற்றி பெற்று கிண்ணம் மற்றும் பணப்பரிசிலை தட்டிச்சென்றனர்.
வெற்றிபெற்ற அணிக்கு முப்பத்தி ஐயாயிரம் ரூபாய் பணப்பரிசு மற்றும் வெற்றிக்கேடயம் என்பன புத்தளம் பிரதேச சபை உறுப்பினர் ஜனாப் எஸ்.எம். ரிஜாஜ் அவர்களினால் வழங்கி கௌரவிக்கப்பட்டது.
இரண்டாம் இடம் பெற்ற யூத் பல்காரா அணிக்கு பதினையாயிரம் ரூபாய் பணப்பரிசு மற்றும் வெற்றிக்கிண்ணம் வழங்கப்பட்டன.
இதேவேளை 40 வயதிற்கு மேற்பட்டோருக்கான அதி விஷேட சுற்றுப்போட்டியில் நாகவில்லு ஸ்டார்ஸ் அணியினை கொழும்பு ஸ்டார்ஸ் அணியினர் 3-0 என்ற கணக்கில் வெற்றிபெற்று பத்தாயிரம் ரூபாய் பணப்பரிசு மற்றும் வெற்றிக்கிண்ணத்தை தட்டிச்சென்றனர்.
வெற்றிபெற்ற பத்தாயிரம் ரூபாய் பணப்பரிசு மற்றும் வெற்றிக்கிண்ணத்தை பாடசாலைக்கு நன்கொடையாக வழங்கிவைக்கப்பட்டமை விஷேட அம்சமாகும்.
நேற்றைய இறுதிநாள் நிகழ்வினை முகப்புத்தகம் வாயிலாக நேரலை செய்த enews1stயிற்கு ஏற்பாட்டுக்குழுவினர் விஷேட நன்றி தெரிவித்ததுடன், இனிய ஸலவாத்துடன் நிகழ்வுகள் யாவும் நிறைவுபெற்றன.
590 total views, 1 views today