Monday, March 27, 2023
Sponsored advertisementspot_img
Sponsored Advertisementspot_img
HomeERUKKALAMPIDDYநாவில்லுவில் உதைப்பந்தாட்டப் போட்டி

நாவில்லுவில் உதைப்பந்தாட்டப் போட்டி

எருக்கலம்பிட்டி கிரியேட்டிவ் மூமன்ட் அமைப்பினரால் ஏற்பாடு செய்யப்பட்ட பாடசாலை மாணவர்களுக்கிடையான சினேக பூர்வ உதைப்பந்தாட்ட சுற்றுப்போட்டி இன்று 27.02.2022 ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றது.

புத்தளம் எருக்கலம்பிட்டி முஸ்லிம் மகா வித்தியாலய மாணவர்களுக்கிடையான குறித்த உதைப்பந்தாட்ட போட்டி இன்று வெகு விமர்சையாக இடம்பெற்றது.

எருக்கலம்பிட்டி கிரியேட்டிவ் மூமன்ட் அமைப்பின் பூரண அணுசரனையில் ஏற்பாடு செய்யப்பட்ட அணிக்கு 7 போர் கொண்ட இச்சுற்றுப்போட்டியில் 10 அணிகள் கழந்துகொண்டன. தரம் 7 முதல் தரம் 11 வரையான பாடசாலை மாணவர்கள் குறித்த போட்டியில் பங்குபற்றினர்.

பாடசாலை மாணவர்களின் உதைப்பந்தாட்ட திறனை மேலும் அதிகரிக்கும் நோக்கில் புத்தளம் எருக்கலம்பிட்டி முஸ்லிம் மகா வித்தியாலயத்துடன் இணைந்து எருக்கலம்பிட்டி கிரியேட்டிவ் மூமன்ட் அமைப்பு இப்போட்டியினை ஏற்பாடு செய்திருந்தமை விஷேட அம்சமாகும்.

இச்சுற்றுப்போட்டியில் இறுதிப்போட்டிக்கு தெரிவான GOAL RAIDER மற்றும் SUPER KINGS அணிகளுக்கடையான அபார போட்டியில் GOAL RAIDER அணி 1-0 என்ற கோல் கணக்கில் கிண்ணத்தை தனதாக்கியது.

இந்நிகழ்வில் புத்தளம் பிரதேச சபை உறுப்பினர் ஜனாப் எஸ்.எம். றிஜாஜ், பாடசாலை அதிபர் ஜனாப் எஸ்.எம். குசைமத், பள்ளிவாசல் நம்பிக்கையாளர் சபை உறுப்பினர்கள், கழகங்கள் மற்றும் ஊர் ஜமாத்தினர் கலந்து சிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது.

 354 total views,  1 views today

RELATED ARTICLES

𝐀𝐋𝐓𝐄𝐂 𝐈𝐓 𝐒𝐎𝐋𝐔𝐓𝐈𝐎𝐍𝐒

Most Popular