கொவிட்-19 தொற்றினால் நாட்டில் மேலும் 18 உயிரிழப்புகள் இடம்பெற்றுள்ளதாக சுகாதார அமைச்சின் தேசிய தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.
10 ஆண்களும், 8 பெண்களுமே இவ்வாறு உயிரிழந்தவர்கள் ஆவர்.
இதனால் இலங்கையில் கொரோனா தொற்று காரணமாக பலியானவர்களின் மொத்த எண்ணிக்கை 15,055 ஆக உயர்வடைந்துள்ளது.
இதேவேளை கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 143 நபர்கள் பூரண குணமடைந்து வைத்தியசாலைகளை விட்டு வெளியேறியதாக முன்னதாக கூறப்பட்டது.
அதனால் கொவிட்-19 தொற்றுக்குள்ளாகி பூரண குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கையும் 561,271 ஆக உயர்வடைந்துள்ளது.
222 total views, 2 views today