இன்று அதிகாலை 2.10 அளவில் பிலியந்தலை கேம்பிரிட்ஜ் கோர்ட் வீட்டுத் தொகுதிக்கு பிரவேசித்த நான்கு பேர் கொண்ட குழுவினால் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக ஊடகவியலாளர் சமுதித சமரவிக்ரம எமது செய்திச் சேவைக்குத் தெரிவித்தார்.
வெள்ளை சிற்றூர்ந்தொன்றில் வந்த குழுவினர், குடியிருப்பின் பிரதான நுழைவாயிலை பலவந்தமாக திறந்து, அங்கிருந்த பாதுகாப்பு உத்தியோகத்தரை துப்பாக்கியை காட்டி மிரட்டியதாக நேரில் கண்ட சாட்சியத்தின் அடிப்படையில் தெரியவந்துள்ளது.
தாக்குதல் நடத்தியவர்கள் வீட்டின் மீது கற்களை வீசி தாக்கியதாக சமுதித்த சமரவிக்ரம மேலும் தெரிவித்துள்ளார்.
அத்துடன் பல தடவைகள் துப்பாக்கிச் சத்தங்களும் கேட்டதாக அவர் கூறினார்.
இந்தச் சம்பவங்கள் தொடர்பில் காவல்துறையினருக்கு உடனடியாக அறிவிக்கப்பட்டதாகவும், அதன் பிரகாரம் காவல்துறையினர் வந்து வீட்டுத் திட்டத்தைச் சூழவுள்ள பகுதிகளில் விசாரணைகளை மேற்கொண்டுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.
இதேவேளை, குறித்த தாக்குதல் தொடர்பான சீ.சி.ரீ.வி காணொளிகள் கிடைக்கப்பெற்றுள்ள நிலையில், அது தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பிலியந்தலை காவல்துறையினர் தெரிவித்தனர்.
ஹிரு தொலைக்காட்சியின் ‘பத்தரே விஸ்தரே’ என்ற பத்திரிகை விவரண நிகழ்ச்சி மற்றும் ‘சலகுண’ என்ற அரசியல் உரையாடல் நிகழ்ச்சிகளை சமுதித்த நெறியாள்கை செய்து வருகிறார்.
அத்துடன் அரசியல் பிரமுகர்கள் மற்றும் அதிகாரிகளை நோக்கி நேரடியாக கேள்விக்கணைகளை தொடுக்கும் பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சி தொகுப்பாளராகவும் அவர் விளங்குகின்றமை குறிப்பிடத்தக்கது.
119 total views, 1 views today