ஏழு அமீரகங்களின் ஆட்சியாளர்களைக் கொண்ட பெடரல் சுப்ரீம் கவுன்சிலின் உறுப்பினர்களால் ஷேக் மொஹமட் பின் சயீத் நல் நஹ்யான் ஜனாதிபதியாக தேர்வு செய்யப்பட்டார்.
ஐக்கிய அரபு இராச்சியத்தின் ஜனாதிபதியான ஷேக் கலீஃபா பின் சையீத் அல் நஹ்யான் தனது 73ஆவது வயதில் நேற்று காலமானார்.
நீண்ட காலமாக நோய் வாய்ப்பட்டிருந்த ஜனாதிபதி, சில காலம் ஆட்சி பொறுப்பிலிருந்து விலகியிருந்ததுடன், பொது நிகழ்வுகளில் கலந்துகொள்வதனை தவிர்த்து வந்திருந்தார்.
இந்நிலையில், ஐக்கிய அரபு இராச்சியத்தில் 40 நாட்கள் உத்தியோகபூர்வ துக்கதினமாக அறிவிக்கப்பட்டுள்ளதுடன், தேசிய கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப்படும் என்றும் அந்நாட்டின் ஜனாதிபதி விவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
இதனையடுத்து ஏற்பட்ட வெற்றிடத்துக்கே இவ்வாறு ஷேக் மொஹமட் பின் சயீத் நல் நஹ்யான் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
217 total views, 1 views today